31 ஜனவரி 2018
இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் இருந்து தார்உல் உலூம் தியோபந்த், மவ்லானா முகம்மது ஸாத் அவர்கள் நபி மூசா (அலைஹிஸ்ஸலாம்) பற்றிய தமது கருத்துக்களிலிருந்து மேற்கொண்ட ருஜூஉ (திரும்பப் பெறுதல்) குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது என்னவெனில், மவ்லானா முகம்மது ஸாத் அவர்கள் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் (நபி மூசா பற்றிய) மேற்கொண்ட ருஜூஉ ஒரளவிற்கு திருப்திகரமானதே. எனினும், தார்உல் உலூம் தியோபந்தின் நிலைப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்ட அறிவுசார் வழிகேடு குறித்த கவலைகளை புறக்கணிக்க முடியாது. ருஜூவை மேற்கொள்ள பல முயற்சிகள் நடந்த பின்னரும், தற்போதைய நபர் இன்னும் புதிய சர்ச்சைக்குரிய கூற்றுகளை வெளியிட்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம். அவரது தஅவா குறித்த குறிப்பிட்ட சிந்தனையில், அதே சுயமாக உருவாக்கப்பட்ட இஜ்திஹாத், தவறான வாதங்கள், மற்றும் ஷரீஆ நூல்களின் தவறான விளக்கம் ஆகியவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் காரணமாக, தார்உல் உலூம் தியோபந்தின் ஊழியர்கள் மட்டுமல்லாமல், அஹ்லுல் ஹக் (நேர்மையான) அறிஞர்கள் அனைவரும் அவரது சிந்தனையை கடுமையாக எதிர்க்கின்றனர்.
இது தொடர்பாக எங்களை அணுகுபவர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்படுகிறது என்னவெனில், தார்உல் உலூம் தியோபந்த் தப்லீகி ஜமாஅத்தின் உள் தகராறிலிருந்து தன்னைத் தூரமாக வைத்துக் கொண்டுள்ளது, மேலும் தொடக்கத்திலிருந்தே தனது நடுநிலைமையை தெளிவாக அறிவித்துள்ளது. எனினும், தவறான சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்த தமது கருத்தை அறிய மக்கள் தார்உல் உலூமை அணுகும் போதெல்லாம், அதை தமது மார்க்கக் கடமையாகக் கருதி, உம்மத்திற்கு வழிகாட்ட தார்உல் உலூம் எப்போதும் முயற்சி செய்கிறது.
கையொப்பங்கள் (மௌலானா முஃப்தி) அபுல் காசிம் நொமானி, (மௌலானா முஃப்தி) சயீத் அஹ்மத் பாலன்பூரி, (மௌலானா ஸையித்) அர்ஷத் மதனி. தேதி 13/05/1439 ஹிஜ்ரி / 31/01/2018


